Tuesday 7 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 2

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி மட்டுமே இருந்தது, எனது குடும்பம் பட்ட கஸ்டங்களிற்க்கு விடுமுறை அந்தன்று...

எனது பயணத்திற்க்குத் தேவையான பொருடக்களைக் கொள்வனவு செய்வதுடனும் இங்கிலாந்தில் கொண்டு சென்று உபயோகிக்கத்தேவையான பொருட்களையும், ஒரு புதிய கடை ஒன்றிற்க்குக் கொள்வனவு செய்வதுபோல் செய்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு பேரிடி ஒன்று ஞாபகம் வந்தது..

அந்த அறுந்துபோன அரசாங்கம், கொண்டுசெல்லும் எடையின் அளவை மட்டுப்படுத்திய விடயம் .... என்ன செய்ய கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ...

மறுநாள் இதை மறந்து இங்கிலாந்தில் படப்போகும் கஸ்டங்களிற்க்கும், எனது இங்குள்ள மகிழ்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒரு விருந்துபசாரம் எனது நண்பர்களுடன் ....

கோயிலிற்க்கு நேந்துவிட்ட கடாவிற்க்குத் தெரியுமா தனது ஈமைக் கிரியைகள் கோயிலித்தான் என்று... அதுபோல் நான் இங்கிலாந்திற்க்கு நேந்து விடப்பட்டவன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.. அதை விளங்கிக்கொள்ளும் நிலைமையிலும் நான் இருக்கவில்லை .... இது எனக்கு மட்டுமல்ல நம்மவர்களில் பலரிற்க்குப் பொருந்தும்.....


தொடரும்......

No comments:

Post a Comment