Thursday 30 December 2010

கணத்தின் கதை


இமயமது கடந்தாலும்.. என் இனியவள் இதயமது கடக்க
இருபது நூற்றாண்டு வேண்டும்...
வேண்டுகிறேன் மறு பிறவி.....
தூண்டுகிறேன் இளமையைப் பொங்கியோடும் காதலாக...
மண்ணினில் மாண்ட மானிடர் மீண்டு கணங்களாய் மாறிக்
கலந்திட்ட கதையும் அறிவேன் ....
என் கண்ணினில் உன்னைக் கலக்கிடும் சங்கதி அறியட்டும் வரும் சந்ததி
சுற்றமே என்னைச் சூழ்திட்ட போதிலும் பெற்றனே வரம் மறுபிறவியாய்
குற்றமேயானால் குறைகளை கூறிடும் ... சுத்தமே ஆனால் சூழ்ந்து வாழ்த்தி வணங்கிடும்...

வஞ்சி


என்னை மிஞ்சிய வஞ்சியை.. வெஞ்சினங் கொண்டு பாரினில் வீழ்த்திட எண்ண.... அவளது துஞ்சமிகு அழகைக் கொஞ்சிடக் கெஞ்சும் மஞ்சங் கொண்ட என் மனதை என்செய்குவேன்

கண்ணீர்

மேகம் தரும் சோகம் தான் மழை ....
யாகம் தரும் சாபம் தான் வரம் ..
காதலி தரும் கண்ணீர் தான் காதல்..

ஊமை இரவுகள்


ஒவ்வொரு இரவுகளும் ஊமையாகும் இடத்தே கனவுகள் பேச ஆரம்பித்து விடுகின்றன...கனவுகள் தடுமாறும் போது காற்றடைத்த வெற்றிடமாக மாறுகிறது மனது அப்போதுதான் நீ வருகிறாய் என்னில் மஞ்சங்கொள்ள....

Sunday 5 December 2010

காதல்


நெருக்கம் தரும் உருக்கத்தின் சுருக்கம் தான் காதல்

சந்தர்ப்பம்

நீ ஒரு முறை தர மறுத்த சந்தர்ப்பம் ஆயுளிற்க்கும் என்னை நினைக்கவைக்கும் என்பதை நீயறியவில்லை...

உனது பெயர்

காதல் நரம்பறுந்த பின்பும் .. உதடுநோக உச்சரிக்கும் உனது பெயர்தான் இன்னும் என்னை உயிரோடு வைதிருக்கிறது...