Sunday 28 November 2010

மந்திர வார்த்தை

மூன்றெழுத்து மந்திர வார்த்தை கேட்டால் எந்திரமும் தந்திரமாக காதல் செய்யும் சுதந்திர பூமியில் .. காதல் சூத்திரம் தேடி யாத்திரம் செய்யும் பாத்திரம் தான் நான் .. இறுதியில் கொண்டது ஆத்திரம், குலம் கோத்திரம் கேட்க்கும் காதலிற்க்கு சாத்திரம் சொல்லும் சாமி நானல்ல

பிரிவு

காதல் பிரிவு காதலை வலுவாக்கும்.. காற்றுப் பிரிவு சுவாசத்தை இலகுவாக்கும்... ஆற்றுப் பிரிவு அமைதியைக் கலைக்கும் .. சோற்றுப் பிரிவு வயிற்றைப் புண்ணாக்கும்.. நாற்றுப் பிரிவு நல்விளைச்சல் தரும்.. கூற்றுப் பிரிவு தெளி விளக்கம் தரும்..... கற்ப்புப் பிரிவு கலக்கம் தரும்.. மூச்சுப் பிரிவே முழுவதிற்க்கும் விடை தரும்.....

மந்திரப்புன்னகை

மனதை மையல் கொள்ளும் உனது மந்திரப்புன்னகையில் மதியிழந்த மைந்தனில் நானும் ஒருத்தன்

காதல் மச்சம்

அவளோ அழகின் உச்சம், நானோ அதில் ஒரு சொச்சம்... இறுதியில் காதலின் பட்சத்தில் கேட்கிறேன் ஒரு காதல் மச்சம்...

கறுப்பு வெள்ளை

வர்ணத்தில் பொது வர்ணம் கறுப்பு, வெள்ளை.. அதற்க்கு வர்ணம் தீட்டி பிளவு காட்டி..... வார்த்தையில் நஞ்சூட்டிக் கூறுகிறது.. நீ கறுப்பு நான் வெள்ளை...

வன்மைகள்


பெண்மையும் மென்மையும் செம்மையான வன்மைகள்

Thursday 25 November 2010

ஒருதலைக் காதல்

ஒற்றைத் தலைவலியாய் பன்னிரண்டு ஆண்டுகளாக நாவுக்கடியில் புதைந்திருந்த அந்த வார்த்தைகளையும், உன்னில் தொலைந்திருக்கும் என்னையும், என்னில் மறைந்திருக்கும் உன்னையும் தேடும் முயற்சியில் கழியட்டும் எனது மீதி வாழ்க்கை...

Tuesday 23 November 2010

புன்னகை

ஊமையின் உதட்டில் இலவசமாய் வரும் வார்த்தை.. உனது உதட்டில் தவழவிட்டால் முத்துக்கள் சிதறிடுமோ...

மறுபிறவி


வாள் வலி, போர் வலி, வாய் வழி வந்த வலி போய்.... செயல் செயற்க் கண்டு வந்த வலியைச் செம்மையாக்க எடுக்கிறேன் பேனாவை....

வாழ நினைக்கிறேன்

மானம் மலையேற.... மனம் சிறையாக.. உடல் இரையாக... உணர்வுகளிற்க்கு விடுதலை கொடுத்து.. உத்தமபுத்திரனாய் வாழ நினைக்கிறேன் இந்த சமுதாயத்திலே....

நஞ்சு

குணம் கொள்ளும் மழையும் அறியும் ... மணம் கொண்ட பூவும் அறியும்... பிணம் தின்னும் கழுகும் அறியும் ....ஆனால் பணம் தின்னும் மனிதர் மட்டும் ஏன் அறிய மறுக்கிறார்கள், அழவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்பதை.........