Thursday 21 October 2010

காதலின் கற்ப்பனை

பறக்கும் பூனைகள் ..சிரிக்கும் காகங்கள்... சிநேகிதம் கொள்ளும் சிங்கங்கள்... இவைகள் நடுவே கனவில் எனக்கென்ன வேலை........காதலின் கற்ப்பனைக்கு அழவேயில்லையா..

காரணம்

தினமும் இரண்டு முறை பல் துலக்குகிறேன்... இரவில் கனவு பசிக்கிறது.. விடியல் வெறுக்கிறது.. உணவிருந்தும் விரதமிருக்கிறேன்... காரணம்..?

மொத்தவடிவம்

ஆயிரம் பட்டாம்பூச்சியின் ஆனந்தம்...ஆரத்தழுவும் அன்புமழை.... அர்த்தமுள்ள கவிதைகள்..அத்தனையும் உருவெடுத்த மொத்தவடிவம் நீதானடி பெண்ணே.

Monday 18 October 2010

தெரியாது


இரண்டு வருடத்திற்க்கு முதல் உன்னை எனக்குத் தெரியாது....ஆனால் இப்போது உன்னைவிட தெரிந்தவர் யாருமில்லை... தற்ப்போது என்னை எனக்கே தெரியாதுபோகிறது....

சினிமா

கூடலால் வந்த ஊடலிற்க்குப் பாட்டிசைப்பதுதான் தற்க்கால சினிமா....

முத்தம்

சத்தம் இன்றி யுத்தம் செய்யும், நவீன நாசக்காரியின் ஆயுதம் தான் முத்தம்...

ஆடவர்


''நில்'' என நிற்பாய்.. ''செல்'' என செல்வாய்.. தற்க்காலத் தையலின் கையில் ஆடவர் ... காரணம் காதலென்பாய்...

சொர்ப்பணம்

பக்கம் வந்து துக்கம் போக்கி பல சொர்க்கம் காட்டும் ஒரு சொர்ப்பணம் தானடி பெண்ணே நீ...

மோகம்

மோகம் வந்தபின் போகுமே விளைபோகம் .. சாகவும் வந்ததே ஒரு பாகம்..

இரவல்

இரவை இரவல் வாங்கும் இடர்பாட்டில் எனது மனது காரணம் மாது மேற்க்கொண்ட மோகம்...

மெளனத்தின் பிடியில்

மனதோ பாரம் இடைவெளியோ தூரம் .. வார்த்தைகளோ மனதின் ஓரம் .. உதடெல்லாம் ஈரம்.. உணர்ச்சிகளோ கிளர்ச்சிகளாக ..
மெளனத்தின் பிடியில் நானும் அவளும்..

தாகம்

எனது பேனாவின் மை எனும் திராவகம் தீர்ந்தாலும் தீராது என் எண்ணத்தை எழுத்துருவாக்கும் தாகம்...

பாரதி இல்லை

இக்காலத்தில் பாரதி இல்லை என்று மகிழ்ச்சியடைபவனில் நானும் ஒருதன்.. ஏனெனில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் அதீதவளர்ச்சி கண்டு ......

Friday 1 October 2010

கவிதைகளாய் வந்தன

எண்ணத்திற்க்குக் கருக் கொடுக்கும் உன் கண்கள் என் பேனாவிற்க்கு உயிர் கொடுக்கும் உன் நினைவுகள் ... கவிதைகளாய் வந்தன இறுதியில்..

அதிஸ்டம்

அதிஸ்டம் வேண்டிக் கோயிலிற்க்குச் சென்றேன் .. உன் துரதிஸ்டம் நீ என் கண்ணில்ப் பட்டாய் கனவு தேவதையாய்..

துடிக்கிறேன்

உனக்குள் என்னைத் தெரியாது தொலைத்தேன் காதல் வரமுன் ..
ஒவ்வொரு கணமும் உனக்குள் என்னைத் தொலைக்கத் துடிக்கிறேன்
காதல் வந்தபின்

உன் சிரிப்பு

உனக்குத் தெரியுமா உன் உயிருள்ள சிரிப்பு என் ஊனமான கவிதைகளிற்க்கு உயிர் கொடுப்பதை

மழை நேர வானவில்


நீ என்னைக் காதலிக்க மறுத்தாலும் உன் நிழல் மறுப்பு சொல்லவில்லையே உன் நிறமற்ற நிழலிற்க்கு நிறம் தீட்டிக் காதலிக்கிறேன் மழை நேர வானவில் போல்...