Sunday 8 August 2010

அம்மா


ஈரைந்து மாதங்களும்..
இனையற்ற பாசங்களுமாய்..
முதன் முதலா நீ பெற்ற..
முதல் முத்து நானம்மா..
நீ முதன் முதலா அனைச்ச போது
ஓ என்று அழுதிருந்தேன் அதை...
நீ சொல்லித் தெரிஞ்சிருந்தன்...

என் அடி வயிறு அழுதிட
நானும் அழுதிட
அவதிப்பட்டு ஓடிவந்தாய்
அனைத்து ஒரு முத்தமிட்டாய்..

பசித்திருந்த போதெல்லாம் ...
உன் உதிரத்தைப் பாலாக்கி
என் பசியை நீ போக்கி வைத்தாய்..
இரவு பகல் பாராமல் இனையற்ற பாசத்தை நீ தந்தாய்...

பள்ளி போகும் வயது வர
பள்ளியிலே சேர்த்த போது
பதறியடித்து ஓடிவந்தேன்
பள்ளியிலே தனிதிடுவேனோ என்று
உடனே பக்குவமாய் எனையனைத்து
தலை கோதிவிட்டு..மிட்டாய் தந்து
பள்ளியிலே சேர்த்து விட்டு..
வாசலோரம் கண்கலங்கி நீ நின்றாய்...

இவ்வாறு நான் பட்ட கடனையெல்லாம்
எவ்வாறு தீர்ப்பேனோ...
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
என் கடன் தீராதம்மா..
எப்பிறப்புப் புண்ணியமோ..
நீ எனக்குத் தாயானாய்
நான் உனக்குச் சேயானேன்..
ஏழேழு ஜென்மமும் நீ எனக்குத்தாயாக..
நித்தமும் இறைவனை வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment