Tuesday 3 August 2010

கருவாட்டுச்சிரிக்கி



முதல்வாட்டி நான் பார்த்தேன்.....
முதன் முதலா நான் தோற்றேன்...
கருவாட்டுச்சிரிக்கி அவ கழுத்தில தான்
கரு கரு எனக் கறுத்திருந்த மச்சந் தான்
பெற்ற வரம் நான் பெறவில்லையடி.....

காலாற நடை போட்டு...
கையாட்டி நான் போக...
காதோரம் நீ வந்து சொன்ன கடி ஜோக் இன்னும்
கடிக்குதடி காதுக்குள்ள...

மனசாறச் சொல்லும் போது
மனசுக்குள் நீ வந்து
மஞ்சங் கொண்டாய் மயிலழகே.....
உன்னை வாயாறச் சொல்லும் போது
வாயெல்லாம் வடியுதடி
கருங்கூட்டுச் செந்தேனாய்......

கனவிலும் கண்டதில்லை
நான் ரசித்த கருவாட்டுச்சிரிக்கி வந்து
கழுத்தில மாலை போடுறத....

நான் செய்த பாக்கியமோ
என் தாய் செய்த பாக்கியமோ
காலத்துக்கும் என்னைக் கடன்காரன் ஆக்கிவிடாள்
தனக்கு கஞ்சி ஊத்தச் சொல்லி....!!!

No comments:

Post a Comment