Wednesday 4 August 2010

பள்ளிக்காதல்




நான் படித்த பள்ளியிலே..
நீ படிக்க வந்திருந்தாய்...
உடனே உன்னைப் பார்த்து...
உள்ளாரக் காதலிச்சன்...
நான் படிச்ச தழிழையெல்லாம்.
நாலுவரிக் கவிதையாக நாளாந்தம் எழுதிவச்சன்....
காலாற நடை போட்டு.. காதோரம் கவி சொல்ல.....

யாரு செய்த குற்றமோ நாலுவரிக் கவிதையெல்லாம்..
உன் அண்ணனிடம் சிக்கியது..
சிக்கியதை எடுத்துக் கொண்டு சீறி வந்து...
முறை முறைத்தான்...
நானும் முறைத்தபடி மனசுக்குள்ள தேற்றிக்கிட்டன்...
வருங்கால மச்சானே என...

மறு நாளோ இதை மறந்துவிட்டு...
இஸ்ரப்பட்டுக் காதலிச்சேன்....
கஸ்ரப்பட்டுக் காதல் சொன்னேன்.....
நான் செய்த புண்ணியம்..
உதட்டோரம் புன்னகையாய்ப் பூத்திருந்தது...

அறியாத வயசில...புரியாமற்ப் புதிர் போடும்
காதலுக்கு அடிமையானேன்...
பரீட்சையில் கோட்டம் விட்டேன்..
பரீட்சையில் சித்திபெற்றவளோ...
சிக்கியதைச் சுருட்டிக் கொண்டு.. சிங்கப்பூர் ஓடி விட்டாள்...

பள்ளியிலே கோட்டம் விட்டேன்...
பரீட்சையிலே கோட்டம் விட்டேன்.....
காதலிலே கோட்டம் விட்டேன்...
கடைசியிலே நாடு விட்டு நாடு வந்து
நாலு காசு நான் சேர்த்தேன்..

சேர்த்ததையும் கொள்ளையடிக்க..
ஒரு சிரிக்கி வந்து விட்டாள்....
அவள் தான் என் பெண்ஜாதி...

காலம் பல போயிடிச்சு
காதலும் மறந்து போயிடிச்சு....
கழுத்தை நீட்டியவளைக் கண் கலங்காமப் பாத்துக்கிட்டேன்.....

சிறிது காலம் சென்ற பின்னர்...
சிலோனுக்குத் திரும்பி வந்தேன் ..
எதிர்பாராத விதமாக எதிர் வந்து தான் நின்றாள்..
ஏமாத்திப் போன சிரிக்கி....

ஏதேதோ கேட்க்க நினைச்சேன்...
எக்கச்சக்கமாய் பேச நினைச்சேன்....
மனசென்ன சொன்னாலும்...
மனசுக்குள்ள...நீ இருந்தாய்...
பேசாம போயிட்டன்....
பேசி என்ன புரியோசனம் என்று.....

No comments:

Post a Comment