Saturday 28 August 2010

காதல் சொல்ல வந்தேன்

பெண்ணே உன்னிடம் நான் காதல் சொல்ல வந்த போது
சுற்றிச் சுழலும் காற்றின் வேகம் பலத்தது..
சிறை கொண்டு நிறைவாக்கும் எனது மூச்சின் பாரத்தை உணர்ந்தேன்..
உடலெங்கும் அக்கினி பூத்தாற்ப் போல் உஸ்ணமழை..
வார்த்தைகள் ஊமையாகும் இடத்தில் எழுத்திற்க்கு உயிர்கொடுத்து..
நான்காண்டுக் காதலை நாலுவரிக் கவிதையாக்கி..
கையில் எடுத்து வந்த.... எனது வாழ்க்கை மடல்
வியர்வையில்த் தெப்பமாக வெப்பமான் காற்று வந்து
கைகொடுத்துச் சென்றது..

அன்று உன்னை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்
எனது வாழ்வின் எல்லை வரை கொண்டு சென்று ..
நட்பு எனும் வேலி போட்டுத் தடுத்து வைத்தது ..
இது எனது நான்காவது முயற்சி..

No comments:

Post a Comment