Thursday, 21 October 2010

காதலின் கற்ப்பனை

பறக்கும் பூனைகள் ..சிரிக்கும் காகங்கள்... சிநேகிதம் கொள்ளும் சிங்கங்கள்... இவைகள் நடுவே கனவில் எனக்கென்ன வேலை........காதலின் கற்ப்பனைக்கு அழவேயில்லையா..

காரணம்

தினமும் இரண்டு முறை பல் துலக்குகிறேன்... இரவில் கனவு பசிக்கிறது.. விடியல் வெறுக்கிறது.. உணவிருந்தும் விரதமிருக்கிறேன்... காரணம்..?

மொத்தவடிவம்

ஆயிரம் பட்டாம்பூச்சியின் ஆனந்தம்...ஆரத்தழுவும் அன்புமழை.... அர்த்தமுள்ள கவிதைகள்..அத்தனையும் உருவெடுத்த மொத்தவடிவம் நீதானடி பெண்ணே.

Monday, 18 October 2010

தெரியாது


இரண்டு வருடத்திற்க்கு முதல் உன்னை எனக்குத் தெரியாது....ஆனால் இப்போது உன்னைவிட தெரிந்தவர் யாருமில்லை... தற்ப்போது என்னை எனக்கே தெரியாதுபோகிறது....

சினிமா

கூடலால் வந்த ஊடலிற்க்குப் பாட்டிசைப்பதுதான் தற்க்கால சினிமா....

முத்தம்

சத்தம் இன்றி யுத்தம் செய்யும், நவீன நாசக்காரியின் ஆயுதம் தான் முத்தம்...

ஆடவர்


''நில்'' என நிற்பாய்.. ''செல்'' என செல்வாய்.. தற்க்காலத் தையலின் கையில் ஆடவர் ... காரணம் காதலென்பாய்...