Showing posts with label karuththu. Show all posts
Showing posts with label karuththu. Show all posts

Monday, 20 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 6

எனது நாட்டிற்க்கு என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும், நாடு கவலைப் பட்டா நமக்கென்ன இலாபம்.... என்று என் மனதிற்க்கு நானே ஆறுதல் கூறியபடி பெருமூச்சு விடுகிறேன், அப்போது அருகில் அசந்திருந்தவர் அருண்டபடி என்னைப் பார்க்கிறார் நானும் அவரைப் பார்த்து வர மறுத்த சிரிப்பை வில்லங்கத்திற்க்கு வர வைக்க அதுவும் வாடிய பூ போல் வந்து விழுந்தது என் உதட்டோரம்.. அதன்பின் அந்த நீண்ட நேரப் பயணத்திற்க்கு உயிர்கொடுத்துக்கொண்டிருந்தது, என்றும் மறவாத என்னுள் எப்போதும் இடம் பிடிக்கும் இனிமையான நினைவுகள் ..... இடையிடையே..அப்பப்போ வந்து போகும் கோடைகால மழை போல்..... வந்து போன ஒரு சில கசப்பான சம்பவங்கள் இவையனைத்தும் செக்கு மாடு போல் என் மூளைக்குள் சுற்றி வந்தன..

இவ்வாறு எனது யோசனையின் வேகம் அதிகரிக்க .. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த நித்திரை எனும் ஓய்வைக் கொடுக்கிறேன் என் கண்களிற்க்கும் மூளைக்கும் ..... ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் என் கனவிலும் நினைவுகள் விட்டு விட்டு கொலை செய்தன.. இப்படியாக முடிவற்ற போராட்டத்தை முடிவிற்க்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன், புதைகுழியில் விழுந்த மனிதனைப் போல் .. ஆட்டம் எனும் நினைவுகள் கூட ஆபத்துக்கள் அதிகம் என்பதால் நினைவுகளிற்க்குப் பூட்டுப் போட்டு சாவியைத் தலையைச் சுற்றி எறியும் போது எனது கை இருக்கையில்ப் பட்டு கண்ணயர்ந்து பார்க்கிறேன் கண்களிலிருந்து முகம் வழியே தவழ்ந்து வந்த கண்ணீர்த்துளி கையை நனைப்பதை....

Friday, 17 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 5

என்றென்றும் நீங்காத நினைவுகளும் என்றுமே ஆறாத மனக் காயங்களும்.. தனிமையில் துணை வரும் நிழல் போல் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து வரப் பிரிவு எனும் பயம் என்னைக் கவ்விக்கொள்கிறது... தட்டுத்தடுமாறியபடி தள்ளாடி நடக்கிறேன் அந்தப் பளிங்குப் பாதையில் .....

இன்றுமுதல் நானும் ஒரு சுமைதாங்கி தான் என்பதுடன் நான் முதலில் சுமப்பது எனது நினைவுகளைதான் என்று எனக்குள் நானெடுத்த முடிவு அது ...சாதாரணமாக முடிவு என்பது கோடைகாலக் கானல்நீர் போல் காலங்கழியக் கழிய கண்காணது போய்விடும் ... இவ்வாறாக இறுதியில் நான் எனது விமான இருக்கையைத் தேடிச்சென்று அமர்ந்தேன்...

சிறிது நேரத்தின் பின் விமானம் ஓடுபாதையில் ஓடி விண்ணிற்க்கு எழுந்து பறந்தது.. அப்போதுதான் உணர்ந்தேன் எனது கனவுகளிற்க்கு இறக்கை முளைத்துப் பறப்பதுபோல் ...
தற்செயலாக விமானத்தின் கண்ணாடி ஜன்னல்களினூடாக வெளியே பார்க்கிறேன் ... பார்க்கடல் கடைய வந்த அமுதம் போல் வானவெளியெங்கும் பரந்து கிடக்கிறது அந்த வெண்மேகங்களும் கார்மேகங்களும்..... எப்படியோ எனது சோகத்தையும் பிரிவையும் அறிந்துகொண்டு மறக்காது கண்ணீர் எனும் மழையைப் பொழிந்தது .. அப்போது உணர்ந்து கொண்டேன் பிரிவு எனக்கு மட்டுமல்ல... எந்நாட்டிற்க்கும் என்னைப் பிரிவது கவலை என்று....

Sunday, 12 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 4

விளி வழி கண்ணீர்த் துளிகளைத் தூவி ஓர் பெரிய கண்ணீர் மழைக்கு தயார்ப்படுத்த, வீலிட்டு வந்த அழுகையை வீம்பிற்க்கு அடக்கிப் புன்னகை பூத்த முகத்துடன் தளதளத்த குரலுடன் '' கவனமாய்ப் போய் வா மோனை'' என்ற வார்த்தைகளைக் கூற நானும் கண் கலங்கியபடி ''அழாதேங்கோ அம்மா'' என்று கூறிய படி எனது உடன் பிறந்த இரண்டாம் அன்னை ஸ்தானத்திற்க்குரிய எனது ஆருயுர்ச் சகோதரியின் முகத்தைப் பார்க்கிறேன்....

அன்றலர்ந்த தாமரை போல் இருந்த முகம் ஒளியிழந்த சூரியனைப் போல் ஒரு வாட்டம், இவையனைத்தும் எனது குடும்பம்பட்ட கஸ்டம் மற்றும் கவலைகள் என்று சொல்லி வார்த்தைகளால் முடித்துக் கொள்ள என் மனமும் எனது பேனாவும் இடங் கொடுக்கவில்லை..

சொல்லிலடங்காத சோகங்கள் சொல்லித் தீராத துயரங்கள் இவையனைத்தும் தூக்கில் ஏற்றியபடி எனது விமானத்தை நோக்கி நடந்து சென்றேன் ஒரு நடை பிணமாய்.......

ஆனால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறு பக்கம் அழவற்ற மகிழ்ச்சி, ஒரு பெண் பிள்ளையைக் கட்டிக்கொடுத்து கரை சேர்த்தளவு மகிழ்ச்சி எனது அம்மாவின் முகத்தில்... இவ்வாறு இதை எண்ணி நடந்து கொண்டருந்த போது எனக்கொரு யோசனை.. இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை இப்பொழுதும் நான் வீடுதிரும்பலாம் என்று..... ஆனால் எனது குடும்பம் பட்ட கஸ்டங்கள் என்னைச் சிலுவையில் ஏற்றி ஆணியறைந்தது....

Thursday, 9 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 3

அதனையடுத்து எனது பயண நாளும் நெருங்கியது.. அன்றுதான் எனது வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் ஒரு கால வரையறையற்ற விடுமுறையை விட்டபடி விமானநிலையத்திற்க்கு அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்...

விமானநிலையத்தைச் சென்றடையும் வரையும், உயரப் பறக்கும் பட்டம் போல் ஒரு எல்லை இல்லாத வானத்தை எப்படியாவது முட்டி விடலாம் என்ற எண்ணத்துடன், நிஜத்திற்க்கு கறுப்பு நிறம் தீட்டி கற்பனை காணும் எண்ணங்கள் மட்டுமே என்னுடன் தவழ்ந்தன...

விமானநிலையத்தை வந்தடைந்ததும் எனது மனதிற்க்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு; அது மகிழ்ச்சியா இல்லை கவலையா, கோபமா இல்லைத் தாபமா என்று வேறுபடுத்திப் பார்க்க யோசனை செய்கிறது எனது மூளை, இறுதியில் பதில் எதுவும் கிடைக்காமல் குழப்பத்தின் மத்தியில் ஆமையின் வேகத்தில் எனது காலடியை நகர்த்தினேன்...

அதன் பின்னர் எனது குடும்பத்தையும் என்னையும் பிரிக்கும் வேலிக்கருகில் நெருங்கினேன், அதுதான் எனது விமானத்தைச் சென்றடைய உதவும் பாதை, அதில் விமானப் பயணிகள் மாத்திரமே உள் நுழைய முடியும் ...

அதைவிட அந்த அறுந்து போன அரசாங்கம் அறியுமா அம்மாவின் பாசம், முட்டையிட்ட கோழிக்குத்தானே வலி தெரியும். இதுவரை என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் மட்டும் வளர்த்து வந்த எனது அம்மா, இக்காத தூரம் அனுப்புவதற்க்கு அம்மாவைத் தூண்டிய காரணங்கள் என்ன வென்று இதுவரை எனக்குப் புரியவில்லை.. அதை அறிந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கு இருக்கவில்லை. காலம் கனியும் போது அம்மா கூறுவார் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்தது....

Tuesday, 7 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 2

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி மட்டுமே இருந்தது, எனது குடும்பம் பட்ட கஸ்டங்களிற்க்கு விடுமுறை அந்தன்று...

எனது பயணத்திற்க்குத் தேவையான பொருடக்களைக் கொள்வனவு செய்வதுடனும் இங்கிலாந்தில் கொண்டு சென்று உபயோகிக்கத்தேவையான பொருட்களையும், ஒரு புதிய கடை ஒன்றிற்க்குக் கொள்வனவு செய்வதுபோல் செய்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு பேரிடி ஒன்று ஞாபகம் வந்தது..

அந்த அறுந்துபோன அரசாங்கம், கொண்டுசெல்லும் எடையின் அளவை மட்டுப்படுத்திய விடயம் .... என்ன செய்ய கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ...

மறுநாள் இதை மறந்து இங்கிலாந்தில் படப்போகும் கஸ்டங்களிற்க்கும், எனது இங்குள்ள மகிழ்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒரு விருந்துபசாரம் எனது நண்பர்களுடன் ....

கோயிலிற்க்கு நேந்துவிட்ட கடாவிற்க்குத் தெரியுமா தனது ஈமைக் கிரியைகள் கோயிலித்தான் என்று... அதுபோல் நான் இங்கிலாந்திற்க்கு நேந்து விடப்பட்டவன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.. அதை விளங்கிக்கொள்ளும் நிலைமையிலும் நான் இருக்கவில்லை .... இது எனக்கு மட்டுமல்ல நம்மவர்களில் பலரிற்க்குப் பொருந்தும்.....


தொடரும்......

Sunday, 5 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 1

நானோ ஒரு சுதந்திரப் பறவை எந்நாட்டில் அந்த பாழ்பட்ட விசா கிடைக்கும் வரை...
நானும் பலரைப் போலே எனது கற்ப்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு இங்கிலாந்து சென்று வாழப்போகும் ஒரு இனிமையான வாழ்வை எண்ணிப் பகல்க் கனவுகண்டு பேரூந்தைத் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.. இது சில நாட்க்கனவல்ல, இரண்டு வருடக்கனவு எப்படியும் நிறைவேறும் என்ற எண்ணத்துடன் எனது படிப்பை முடித்துக்கொண்டு மேலதிகப் படிப்பிற்க்காக இங்கிலாந்து செல்வதுதான் எனதெண்ணம்..

ஆனால் நாம் நினைப்பததொன்று நடப்பதொன்று.. இது ஆண்டவன் வகுத்த வழி ஆனால் நான் அதற்கு எப்படி விதிவிலகாகேலும்.. என்னையும் பணம் எனும் கார்மேகம் சூழ்ந்து திண்டாட்டம் எனும் மழையைப் பொழிந்தது..

இறுதியாக நாய் படாப் பாடுபட்டு எனது குடும்பத்தின் உதவியுடனும் உறவினரின் உதவியுடனும் ஒருவழியாக விசாவிற்க்கு எனது விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைத்தேன்..

அனுப்பிய இரண்டாம் நாளே எனது விசாவின் முடிவைத் தெரிந்து கொள்வதற்க்கு கனணி முன்னால் கடுந்தவம் இருந்த காலங்களிற்க்கு கணக்கில்லை..

விசாவின் முடிவு வரும் வரை எனது காதலி முதல் மனைவி வரை எல்லாம் அந்த இத்துப்போன கனணி தான்.. இப்படியாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் நாளும் நெருங்கியது எனது கனணிக்கும் எனக்கும் விடிவு காலம் பிறந்தது... அதுதான் அந்தப் பாழ்பட்ட விசா கையில் கிடைத்த நாள்.



தொடரும்...