எனது நாட்டிற்க்கு என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும், நாடு கவலைப் பட்டா நமக்கென்ன இலாபம்.... என்று என் மனதிற்க்கு நானே ஆறுதல் கூறியபடி பெருமூச்சு விடுகிறேன், அப்போது அருகில் அசந்திருந்தவர் அருண்டபடி என்னைப் பார்க்கிறார் நானும் அவரைப் பார்த்து வர மறுத்த சிரிப்பை வில்லங்கத்திற்க்கு வர வைக்க அதுவும் வாடிய பூ போல் வந்து விழுந்தது என் உதட்டோரம்.. அதன்பின் அந்த நீண்ட நேரப் பயணத்திற்க்கு உயிர்கொடுத்துக்கொண்டிருந்தது, என்றும் மறவாத என்னுள் எப்போதும் இடம் பிடிக்கும் இனிமையான நினைவுகள் ..... இடையிடையே..அப்பப்போ வந்து போகும் கோடைகால மழை போல்..... வந்து போன ஒரு சில கசப்பான சம்பவங்கள் இவையனைத்தும் செக்கு மாடு போல் என் மூளைக்குள் சுற்றி வந்தன..
இவ்வாறு எனது யோசனையின் வேகம் அதிகரிக்க .. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த நித்திரை எனும் ஓய்வைக் கொடுக்கிறேன் என் கண்களிற்க்கும் மூளைக்கும் ..... ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் என் கனவிலும் நினைவுகள் விட்டு விட்டு கொலை செய்தன.. இப்படியாக முடிவற்ற போராட்டத்தை முடிவிற்க்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன், புதைகுழியில் விழுந்த மனிதனைப் போல் .. ஆட்டம் எனும் நினைவுகள் கூட ஆபத்துக்கள் அதிகம் என்பதால் நினைவுகளிற்க்குப் பூட்டுப் போட்டு சாவியைத் தலையைச் சுற்றி எறியும் போது எனது கை இருக்கையில்ப் பட்டு கண்ணயர்ந்து பார்க்கிறேன் கண்களிலிருந்து முகம் வழியே தவழ்ந்து வந்த கண்ணீர்த்துளி கையை நனைப்பதை....
