Showing posts with label kavithaigal. Show all posts
Showing posts with label kavithaigal. Show all posts

Thursday, 30 December 2010

கணத்தின் கதை


இமயமது கடந்தாலும்.. என் இனியவள் இதயமது கடக்க
இருபது நூற்றாண்டு வேண்டும்...
வேண்டுகிறேன் மறு பிறவி.....
தூண்டுகிறேன் இளமையைப் பொங்கியோடும் காதலாக...
மண்ணினில் மாண்ட மானிடர் மீண்டு கணங்களாய் மாறிக்
கலந்திட்ட கதையும் அறிவேன் ....
என் கண்ணினில் உன்னைக் கலக்கிடும் சங்கதி அறியட்டும் வரும் சந்ததி
சுற்றமே என்னைச் சூழ்திட்ட போதிலும் பெற்றனே வரம் மறுபிறவியாய்
குற்றமேயானால் குறைகளை கூறிடும் ... சுத்தமே ஆனால் சூழ்ந்து வாழ்த்தி வணங்கிடும்...

வஞ்சி


என்னை மிஞ்சிய வஞ்சியை.. வெஞ்சினங் கொண்டு பாரினில் வீழ்த்திட எண்ண.... அவளது துஞ்சமிகு அழகைக் கொஞ்சிடக் கெஞ்சும் மஞ்சங் கொண்ட என் மனதை என்செய்குவேன்

கண்ணீர்

மேகம் தரும் சோகம் தான் மழை ....
யாகம் தரும் சாபம் தான் வரம் ..
காதலி தரும் கண்ணீர் தான் காதல்..

ஊமை இரவுகள்


ஒவ்வொரு இரவுகளும் ஊமையாகும் இடத்தே கனவுகள் பேச ஆரம்பித்து விடுகின்றன...கனவுகள் தடுமாறும் போது காற்றடைத்த வெற்றிடமாக மாறுகிறது மனது அப்போதுதான் நீ வருகிறாய் என்னில் மஞ்சங்கொள்ள....

Sunday, 5 December 2010

காதல்


நெருக்கம் தரும் உருக்கத்தின் சுருக்கம் தான் காதல்

சந்தர்ப்பம்

நீ ஒரு முறை தர மறுத்த சந்தர்ப்பம் ஆயுளிற்க்கும் என்னை நினைக்கவைக்கும் என்பதை நீயறியவில்லை...

உனது பெயர்

காதல் நரம்பறுந்த பின்பும் .. உதடுநோக உச்சரிக்கும் உனது பெயர்தான் இன்னும் என்னை உயிரோடு வைதிருக்கிறது...

Sunday, 28 November 2010

மந்திர வார்த்தை

மூன்றெழுத்து மந்திர வார்த்தை கேட்டால் எந்திரமும் தந்திரமாக காதல் செய்யும் சுதந்திர பூமியில் .. காதல் சூத்திரம் தேடி யாத்திரம் செய்யும் பாத்திரம் தான் நான் .. இறுதியில் கொண்டது ஆத்திரம், குலம் கோத்திரம் கேட்க்கும் காதலிற்க்கு சாத்திரம் சொல்லும் சாமி நானல்ல

பிரிவு

காதல் பிரிவு காதலை வலுவாக்கும்.. காற்றுப் பிரிவு சுவாசத்தை இலகுவாக்கும்... ஆற்றுப் பிரிவு அமைதியைக் கலைக்கும் .. சோற்றுப் பிரிவு வயிற்றைப் புண்ணாக்கும்.. நாற்றுப் பிரிவு நல்விளைச்சல் தரும்.. கூற்றுப் பிரிவு தெளி விளக்கம் தரும்..... கற்ப்புப் பிரிவு கலக்கம் தரும்.. மூச்சுப் பிரிவே முழுவதிற்க்கும் விடை தரும்.....

மந்திரப்புன்னகை

மனதை மையல் கொள்ளும் உனது மந்திரப்புன்னகையில் மதியிழந்த மைந்தனில் நானும் ஒருத்தன்

காதல் மச்சம்

அவளோ அழகின் உச்சம், நானோ அதில் ஒரு சொச்சம்... இறுதியில் காதலின் பட்சத்தில் கேட்கிறேன் ஒரு காதல் மச்சம்...

கறுப்பு வெள்ளை

வர்ணத்தில் பொது வர்ணம் கறுப்பு, வெள்ளை.. அதற்க்கு வர்ணம் தீட்டி பிளவு காட்டி..... வார்த்தையில் நஞ்சூட்டிக் கூறுகிறது.. நீ கறுப்பு நான் வெள்ளை...

வன்மைகள்


பெண்மையும் மென்மையும் செம்மையான வன்மைகள்

Thursday, 25 November 2010

ஒருதலைக் காதல்

ஒற்றைத் தலைவலியாய் பன்னிரண்டு ஆண்டுகளாக நாவுக்கடியில் புதைந்திருந்த அந்த வார்த்தைகளையும், உன்னில் தொலைந்திருக்கும் என்னையும், என்னில் மறைந்திருக்கும் உன்னையும் தேடும் முயற்சியில் கழியட்டும் எனது மீதி வாழ்க்கை...

Tuesday, 23 November 2010

புன்னகை

ஊமையின் உதட்டில் இலவசமாய் வரும் வார்த்தை.. உனது உதட்டில் தவழவிட்டால் முத்துக்கள் சிதறிடுமோ...

மறுபிறவி


வாள் வலி, போர் வலி, வாய் வழி வந்த வலி போய்.... செயல் செயற்க் கண்டு வந்த வலியைச் செம்மையாக்க எடுக்கிறேன் பேனாவை....

வாழ நினைக்கிறேன்

மானம் மலையேற.... மனம் சிறையாக.. உடல் இரையாக... உணர்வுகளிற்க்கு விடுதலை கொடுத்து.. உத்தமபுத்திரனாய் வாழ நினைக்கிறேன் இந்த சமுதாயத்திலே....

நஞ்சு

குணம் கொள்ளும் மழையும் அறியும் ... மணம் கொண்ட பூவும் அறியும்... பிணம் தின்னும் கழுகும் அறியும் ....ஆனால் பணம் தின்னும் மனிதர் மட்டும் ஏன் அறிய மறுக்கிறார்கள், அழவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்பதை.........

Thursday, 21 October 2010

காதலின் கற்ப்பனை

பறக்கும் பூனைகள் ..சிரிக்கும் காகங்கள்... சிநேகிதம் கொள்ளும் சிங்கங்கள்... இவைகள் நடுவே கனவில் எனக்கென்ன வேலை........காதலின் கற்ப்பனைக்கு அழவேயில்லையா..

காரணம்

தினமும் இரண்டு முறை பல் துலக்குகிறேன்... இரவில் கனவு பசிக்கிறது.. விடியல் வெறுக்கிறது.. உணவிருந்தும் விரதமிருக்கிறேன்... காரணம்..?