Wednesday, 1 September 2010

வெட்டுக்குத்து

தினமும் என்கனவினில் உன் நெற்றிப் பொட்டுடன் வெட்டுக்குத்து பெண்ணே.. ஏனெனில் எனது முத்தம் மூழ்கி முத்தெடுக்கும் இடத்தில் அதற்க்கென்ன வேலை..

மந்தாரத்தேனீ

நானும் உன் இதழ் எனும் உதட்டில் தினமும் மதரசம் பருக வரும் மந்தாரத்தேனீ..

எனது காதல்

இளமைக் காதல் இத்துப்போன காதல்
முதுமைக் காதல் முத்திப்போன காதல்
ஆனால் எனது காதல் இரண்டிற்க்கும் இடையில்
இலக்கையடையும் காதல்...

ஓர் ஆண் மகன்

ஓரிடை பார்க்க ஸ்ரீராமனும் இல்லை..
உண்மையை மட்டும் பேச உத்தமன் அரிச்சந்திரனும் இல்லை..
ஆசா பாசங்களுமாய், இரத்தமும் சதையுமாய் இருக்கும் ஓர் ஆண் மகன் நானடி பெண்ணே...

Monday, 30 August 2010

கொலையாளிகள்

என்நாட்டில் பெண்களும் கொலையாளிகள்தான்... ஏனெனில் அவர்களது காதற்க் கொலைகளிற்க்கு அளவுகணக்கில்லை..

பொய்யானது

பெண்ணே உனக்குத் தெரியுமா கண் எவ்வளவு பொய்யானது என..??? ஏனெனில் உனது ஒவ்வொரு விடயத்தையும் அழகாய்க் காட்டுகிறதே...??

Saturday, 28 August 2010

தொலைத்தவர்கள்

காதலால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர் ..
ஆனால் வாழ்க்கையில் காதலைத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன்..