Sunday, 28 November 2010

கறுப்பு வெள்ளை

வர்ணத்தில் பொது வர்ணம் கறுப்பு, வெள்ளை.. அதற்க்கு வர்ணம் தீட்டி பிளவு காட்டி..... வார்த்தையில் நஞ்சூட்டிக் கூறுகிறது.. நீ கறுப்பு நான் வெள்ளை...

வன்மைகள்


பெண்மையும் மென்மையும் செம்மையான வன்மைகள்

Thursday, 25 November 2010

ஒருதலைக் காதல்

ஒற்றைத் தலைவலியாய் பன்னிரண்டு ஆண்டுகளாக நாவுக்கடியில் புதைந்திருந்த அந்த வார்த்தைகளையும், உன்னில் தொலைந்திருக்கும் என்னையும், என்னில் மறைந்திருக்கும் உன்னையும் தேடும் முயற்சியில் கழியட்டும் எனது மீதி வாழ்க்கை...

Tuesday, 23 November 2010

புன்னகை

ஊமையின் உதட்டில் இலவசமாய் வரும் வார்த்தை.. உனது உதட்டில் தவழவிட்டால் முத்துக்கள் சிதறிடுமோ...

மறுபிறவி


வாள் வலி, போர் வலி, வாய் வழி வந்த வலி போய்.... செயல் செயற்க் கண்டு வந்த வலியைச் செம்மையாக்க எடுக்கிறேன் பேனாவை....

வாழ நினைக்கிறேன்

மானம் மலையேற.... மனம் சிறையாக.. உடல் இரையாக... உணர்வுகளிற்க்கு விடுதலை கொடுத்து.. உத்தமபுத்திரனாய் வாழ நினைக்கிறேன் இந்த சமுதாயத்திலே....

நஞ்சு

குணம் கொள்ளும் மழையும் அறியும் ... மணம் கொண்ட பூவும் அறியும்... பிணம் தின்னும் கழுகும் அறியும் ....ஆனால் பணம் தின்னும் மனிதர் மட்டும் ஏன் அறிய மறுக்கிறார்கள், அழவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்பதை.........